Thursday, 5 September 2013

வன்மம்

                                 

ஒவ்வொரு இரவுகளில் விருட்சங்கள்
வேரூன்றி நிற்கின்றன-

கூர்மையான முட்களால்
மிரட்டும் கிளைகள்...

முட்களின் முனைகளில்
சொட்டும் உதிரம்.

கதறல்களாய்
இலைகளின் இறைச்சல்

நீருக்கு பதிலாய்
தாய்மண்ணின் இரத்தம்
சுரண்டும் வேர்கள்-

கனிந்த கனிகளும்
விட்டுச் செல்வது
விசம் நிறைந்த விதைகளை-

வக்கிரம்
வன்முறை
வாழ்வின் இயலாமைகள்
ஒவ்வொரு இரவுகளில்
விருட்சங்களாய்
முளைத்து விடுகின்றன கனவுக் காடுகளில்...........
                        


No comments:

Post a Comment